9 சிறுமிகளை கற்பழித்த வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் சென்னையில் கைது
சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் ஹசன் திருவள்ளூர் அருகே மீட்கப்பட்டுள்ளார்.
பாரிமுனையை சேர்ந்த தொழிலதிபர் காஜாவின் மகன் ஹசன் நேற்றிரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
ஹசனை விடுவிக்க ஒன்றரை கோடி ரூபாயை 12 மணிக்குள் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டியிருந்தனர்.
கடத்தல்காரர்களை பிடிக்க நேற்றிரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூரில் கடத்தல்காரர்கள் ஹசனை இறக்கி விட்டு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கெடு முடிந்த நிலையில் ஹசனை தாங்களாகவே விடுவித்துள்ளனர் கடத்தல்காரர்கள். இதனிடையே ஹசனை கடத்தியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அப்போது, ஜாமீனில் வெளியே வந்த அவர் நேபாள நாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார். இந்த சூழ்நிலையில், அவர் மீது நடைபெற்று வந்த வழக்கில் பிரான்ஸ் கோர்ட்டு அவருக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
நேபாளத்தில் சுமார் ஒரு வருடம் தங்கி இருந்த அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இந்தியாவில் உத்ராஞ்சல், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு சென்னைக்கு வந்த மார்டின், மாதவரம் நடேசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்.
இந்த நிலையில், எரிக் மார்டினை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை பிரான்ஸ் போலீசார் நாடினார்கள்.
இது தொடர்பாக சர்வதேச போலீசார் விசாரித்தபோது, எரிக் மார்டின் இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது. சென்னையில் இருக்கும் அவரை கைது செய்ய சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின் பேரில் சூப்பிரண்டு சம்பத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று எழும்பூருக்கு வந்த, எரிக் மார்டினை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரை அழைத்துக் கொண்டு போலீசார் அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவை தொலைந்து விட்டதாக கடந்த 2006-ம் ஆண்டில் அவர் உத்ராஞ்சல் போலீசில் புகார் செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும், பிரான்சில் இருக்கும் அவருடைய தந்தை செலவுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வருவதையும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள மார்டினிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Nakkheeran.in